×

டெஸ்ட் தொடருக்கான அணியில் இடம்: சிறப்பு அனுமதியுடன் லண்டன் செல்லும் பிரித்வி ஷா, சூர்யகுமார்

மும்பை: இலங்கை சுற்றுப்பயணம் முடித்து தவான் உள்ளிட்ட இந்திய வீரர்கள் நேற்று பெங்களூரூ திரும்பினர். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள குர்ணல்பாண்டியா, கவுதம், சாஹல் கொழும்பில் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர். குணமடைந்த பின்னர் அவர்கள் நாடு திரும்புவர். 


இதனிடையே இந்திய டெஸ்ட் அணியில் சேர்க்கப்பட்டுள்ள பிரித்வி ஷா, சூர்யகுமார் யாதவ் ஆகியோர் சிறப்பு அனுமதி பெற்று கொழும்பில் இருந்து இன்று லண்டன் புறப்படுகின்றனர்.

கொரோனா காரணமாக இலங்கையில் இருந்து இங்கிலாந்துக்கு வர அந்நாடு தடை விதித்துள்ளது. ஆனால் சிறப்பு அனுமதியுடன் இருவரும் இன்று புறப்படுகின்றனர். அங்கு 10 நாள் தனிமைப்படுத்தப்பட்ட பின்னர் இந்திய அணியுடன் இணைவர். இதனிடையே இங்கிலாந்தின் டர்ஹாமில் கடந்த சில நாட்களாக பயிற்சியில் ஈடுபட்ட கோஹ்லி தலைமையிலான இந்திய அணியினர் நேற்று நாட்டிங்காம் புறப்பட இருந்தனர். ஆனால் மோசமான வானிலை காரணமாக இன்று செல்கின்றனர். நாட்டிங்காமில் வரும் 4ம் தேதி முதல் டெஸ்ட் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : Prithvi Shah ,Suryakumar ,London , Test series, Prithvi Shah, Suryakumar
× RELATED மலர்களோடு பூத்துக் குலுங்கும்